Kural 694

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியா ரகத்து.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

sevichchollum saerndha nakaiyum aviththozhukal
aandra periyaa rakaththu.

🌐 English Translation

English Couplet

All whispered words and interchange of smiles repress,
In presence of the men who kingly power possess.

Explanation

While in the presence of the sovereign, ministers should neither whisper to nor smile at others.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

வல்லமை அமைந்த பெரியாரிடத்தில் (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதல் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுகவேண்டும்.

2 மணக்குடவர்

அமைந்த பெரியாரிடத்து ஒருவன் செவியுட் சொல்லுதலும், ஒருவன் முகம்பார்த்துத் தம்மில் நகுதலும் தவிர்ந்தொழுகல் வேண்டும். இது கூற்றும் நகையும் ஆகாவென்றது.

3 பரிமேலழகர்

ஆன்ற பெரியாரகத்து - அமைந்த அரசர் அருகு இருந்தால்; செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல் - அவர் காண ஒருவன் செவிக்கண் சொல்லுதலையும் ஒருவன் முகம் நோக்கி நகுதலையும் தவிர்த்து ஒழுகுக. (சேர்தல்: பிறனொடு சேர்தல். செய்தொழுகின், தம் குற்றம் கண்டு செய்தனவாகக் கொள்வர் என்பது கருத்து.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

ஆன்ற பெரியாரகத்து- வலிமை நிறைந்த அரசரருகில் இருக்கும்போது ; செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல் - அவர்காண ஒருவர் காதிற்குள் மெதுவாகச் சொல்லுதலையும் ஒருவர் முகம் நோக்கிச் சிரித்தலையும் அடியோடு விட்டுவிடுக. 'சேர்ந்த நகை' என்றதனால் பிறரொடு கூடிச் சிரித்தலும் அடங்கும். செவிச் சொல்லும் சேர்ந்த நகையும் தம்மைப்பற்றியே நிகழ்ந்தனவாகக் கருதிக் கடுஞ்சினங் கொள்ளின் அன்றே அழித்துவிடும் ஆற்றலராதலின், 'ஆன்ற பெரியார்' என்றும் 'அவித்தொழுகல்' என்றும்,கூறினார்.

5 சாலமன் பாப்பையா

மேன்மை மிக்க பெரியவர் அருகே இருக்கும்போது, பிறருடன் காதருகே மெல்லப் பேசுவதையும் அடுத்தவர் முகம் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரிப்பதையும் செய்யாது நடந்துகொள்க.

6 கலைஞர் மு.கருணாநிதி

ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும்.

7 சிவயோகி சிவக்குமார்

சத்தமாக பேசுவதையும், சரிசமமாக சிரிப்பதையும் சிறந்த பெரியவர்களிடம் தவிர்க்க வேண்டும்.

More Kurals from மன்னரைச் சேர்ந்தொழுதல்

அதிகாரம் 70: Kurals 691 - 700

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature