செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும்.
Transliteration
seyyaamal setraarkkum innaadha seydhapin
uyyaa vizhumanh tharum.
🌐 English Translation
English Couplet
Though unprovoked thy soul malicious foes should sting,
Retaliation wrought inevitable woes will bring.
Explanation
In an ascetic inflict suffering even on those who hate him, when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrow.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.
2 மணக்குடவர்
தானொரு குற்றஞ் செய்யாதிருக்கத் தனக்கு இன்னாத வற்றைச் செய்தவர்க்கும், இன்னாதவற்றைச் செய்யின் அஃது உய்வில்லாத நோயைத்தரும். இது காரணமின்றி இன்னாதன செய்தவர்க்கும் பொல்லாங்கு செய்தலைத் தவிரவேண்டுமென்றது.
3 பரிமேலழகர்
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் - தான் முன்பு ஓர் இன்னாமை செய்யாதிருக்கத் தன்மேல் செற்றம் கொண்டவர்க்கும் இன்னாதவற்றைத் துறந்தவன் செய்யுமாயின்; உய்யா விழுமம் தரும் - அச்செயல் அவனுக்குக் கடக்க முடியாத இடும்பையைக் கொடுக்கும். (அவ்விடும்பையாவது தவம் இழந்து பழியும் பாவமும் எய்துதல்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்- தான் ஒரு தீங்கும் செய்யாதிருக்கவும் தன்மேற் பகைமைகொண்டு தீங்கு செய்தவர்க்கும் துறவுபூண்டவன் தீயவற்றைச் செய்வானாயின்; உய்யா விழுமம் தரும்- அச்செயல் அவனுக்குத் தப்ப முடியாத துன்பத்தைத்தரும். துன்பமாவது தவமிழத்தலும் கரிசு(பாவம்) அடைதலும். துறவறத்தில் தீமைக்குத் தீமை செய்தலும் தீவினையாம்.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
தான் முன்பு ஒரு தீமையும் செய்யாதிருக்கத் தன்மேல் கோபம் கொண்டவர்க்குத் துன்பத்தினை முனிவன் செய்வானானால் அச்செயல் அவனுக்குக் கடக்க முடியாத துன்பத்தினைத் தரும்.
6 சாலமன் பாப்பையா
நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும்.
7 கலைஞர் மு.கருணாநிதி
யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்.
8 சிவயோகி சிவக்குமார்
பகைகொண்டு ஏதும் செய்யாதவர்களுக்கு துன்பம் செய்தால் பின்பு மீளமுடியாத தொல்லை ஏற்படும்.
More Kurals from இன்னாசெய்யாமை
அதிகாரம் 32: Kurals 311 - 320
Related Topics
Because you're reading about Non-Violence