சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு.
Transliteration
siRiyaar uNarchchiyul illai periyaaraip
paeNikkoL vaemennum noakku.
🌐 English Translation
English Couplet
'As votaries of the truly great we will ourselves enroll,'
Is thought that enters not the mind of men of little soul.
Explanation
It is never in the nature of the base to seek the society of the great and partake of their nature.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
பெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.
2 மணக்குடவர்
சிறுமையுடையார் உணர்வின்கண் இல்லை, பெருமை யுடையாரைப் போற்றித் துணையாகக் கொள்வேமென்னும் கருத்து. இது பெரியாரைப் பெறுதலும் பெருமையென்று கூறிற்று.
3 பரிமேலழகர்
பெரியாரைப் பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு - அப்பெற்றியராய பெரியாரை வழிபட்டு அவர் இயல்பினை யாம் கோடும் என்னும் கருத்து; சிறியார் உணர்ச்சியுள் இல்லை - மற்றைச் சிறியராயினார் மனத்தின்கண் உளதாகாது. (குடிமை, செல்வம், கல்வி என்று இவற்றது உண்மை மாத்திரத்தால் தம்மை வியந்திருப்பார்க்கு, அவை தமக்கு இயல்பு என்று அமைந்திருப்பாரை வழிபட்டு, அஃது உடையராதல் கூடாது என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
பெரியாரைப் பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு - கல்வியறி வாற்ற லொழுக்கங்களாற் பெரியாரைப் போற்றி அவரைப் பின்பற்றுவோம் என்னும் குறிக்கோள்; சிறியார் உணர்ச்சியுள் இல்லை - அந்நால்வகையிலும் சிறியவராயிருப்பவரின் உள்ளத்தில் தோன்றுவதில்லை. இம்மனப்பான்மை அறியாமை, செருக்கு, தன்னலம் ஆகிய வற்றால் உண்டாவது. மறைமலையடிகள் காலத்தில் அவர்களைத் தமிழர் போற்றாதிருந்ததே இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாம்.
5 சாலமன் பாப்பையா
பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது.
6 கலைஞர் மு.கருணாநிதி
பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை.
7 சிவயோகி சிவக்குமார்
சிறுமைப்பட்ட மனிதர்களின் உணர்ச்சியில் இருக்காது பெருமைக்கு உரிய பெரியவர்களை போற்றி ஏற்கும் நோக்கம்.
8 புலியூர்க் கேசிகன்
‘இத்தகையவரான பெரியோரை வழிபட்டு அவரியல்பை நாமும் அடைவோம்’ என்னும் நல்ல நோக்கம், மற்றைச் சிறியார் மனத்தில் ஒரு போதும் உண்டாகாது.
More Kurals from பெருமை
அதிகாரம் 98: Kurals 971 - 980
Related Topics
Because you're reading about Greatness