Kural 964

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

thalaiyin izhindha mayiranaiyar maandhar
nilaiyin izhindhak kadai.

🌐 English Translation

English Couplet

Like hairs from off the head that fall to earth,
When fall'n from high estate are men of noble birth.

Explanation

They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.

2 மணக்குடவர்

தலையினின்று இறங்கிய மயிரைப்போல இகழப்படுவர்: மாந்தர் தமது நிலையினின்று நீங்கித் தாழ ஒழுகின விடத்து.

3 பரிமேலழகர்

மாந்தர் - குடிப்பிறந்த மாந்தர்; நிலையின் இழிந்தக்கடை - தம் உயர்ந்த நிலையைவிட்டு அதனின்றும் தாழ்ந்த வழி; தலையின் இழிந்த மயிர் அனையர் - தலையை விட்டு அதனினின்றும் வீழ்ந்த மயிரினை ஒப்பர், {அந்நிலையை விடாது நின்ற வழிப் பேணப்படுதலும,¢ விட்டுத் தாழ்ந்த வழி இழிக்கப்படுதலும் உவமையாற் பெற்றாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

மாந்தர் - குடிப்பிறந்த மக்கள்; நிலையின் இழிந்தக் கடை - தம் உயர்ந்த நிலையினின்றும் ஒழுக்கக் கேட்டால் தாழ்ந்த விடத்து; தலையின் இழிந்த மயிர் அனையர் - தலையினின்று கழிந்த மயிரை யொப்பர். குடிப்பிறந்தார் தம் பிறப்பிற்குரிய பண்பாட்டு நிலையில் நின்ற விடத்து மதிக்கப்படுதலும், அதினின்று தவறியவிடத்து அவமதிக்கப்படுதலும், உவமத்தாற் பெறப்பட்டன. இழிதல் என்னும் சொல் கீழ் விழுதலையும் இழிவடைதலையும் இங்கு ஒருங்கே உணர்த்தும்.

5 சாலமன் பாப்பையா

நல்ல குடும்பத்தில் பிறந்தவர் மானம் காக்காமல் தம் உயர்ந்த நிலையை விட்டுவிட்டுத் தாழ்ந்தால், தலையை விட்டு விழுந்த மயிரைப் போன்றவர் ஆவார்.

6 கலைஞர் மு.கருணாநிதி

மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார்.

7 சிவயோகி சிவக்குமார்

தலையில் இருந்து திடமற்று உதிர்ந்தாலும் மக்காத மயிர் போன்றவர் மனித கூட்டத்தில் இருந்து தன் நிலை இழிவான இறுதியை அடைந்தவர்.

8 புலியூர்க் கேசிகன்

நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் உயர்வான நிலையை விட்டுத் தாழ்ந்த விடத்து, தலையைவிட்டு அகன்று விழுந்த மயிரைப் போல இழிவு அடைவார்கள்.

More Kurals from மானம்

அதிகாரம் 97: Kurals 961 - 970

Related Topics

Because you're reading about Honor & Dignity

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature