தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள்.
Transliteration
thanhnhalam paarippaar thoayaar thakaiserukkip
punnalam paarippaar thoaL.
🌐 English Translation
English Couplet
From touch of those who worthless charms, with wanton arts, display,
The men who would their own true good maintain will turn away.
Explanation
Those who would spread (the fame of) their own goodness will not desire the shoulders of those who rejoice in their accomplishments and bestow their despicable favours (on all who pay).
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
அழகு முதலியவற்றால் செருக்கு கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொது மகளிரின் தோளை, தம் நல்லோழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.
2 மணக்குடவர்
தம்முடைய நலத்தை உலகின்கண் பரப்புவார் சேரார்: வனப்பினால் களிப்புற்றுத் தமது புல்லிய நலத்தை எல்லார்மாட்டும் பரப்புவாரது தோளினை.
3 பரிமேலழகர்
தகை செருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள் - ஆடல், பாடல், அழகு என்பனவற்றால் களித்துத், தம் புல்லிய நலத்தை விலை கொடுப்பார் யாவர்மாட்டும் பரப்பும் மகளிர் தோளினை; தம் நலம் பாரிப்பார் தோயார் - அறிவொழுக்கங்களானாய தம் புகழை உலகத்துப் பரப்புதற்குரிய உயர்ந்தோர் தீண்டார். (ஆடல் முதலிய மூன்றும் உடைமை அவர்க்கு மேம்பாடாகலின் 'தகை' என்றும், தோயின் அறிவொழுக்கங்கள் அழியும் ஆகலின் அவற்றால் புகழ் பரப்புவார் 'தோயார்' என்றும் கூறினார். தம்நலம் என்புழி 'நலம்' ஆகுபெயர். இவை மூன்று பாட்டானும் அவரை உயர்ந்தோர் தீண்டார் என்பது கூறப்பட்டது.)
4 ஞா.தேவநேயப் பாவாணர்
தம் நலம் பாரிப்பார்-கல்வியறிவாலும் நற்குணநற் செய்கையாலும் தம் புகழை உலகத்திற் பரவச் செய்யும் உயர்ந்தோர்; தகை செருக்கிப் புல் நலம் பாரிப்பார் தோள் தோயார்-ஆடல்,பாடல்,ஒப்பனை முதலியவற்றால் தம் திறத்தை மிகுத்துத் தம்மால் ஆடவர் பெறும் இன்பத்தைப் பொருள் கொடுப்பாரிடத் தெல்லாம் பரப்பும் விலைமகளிரின் தோளைத் தீண்டார். தகை அழகு.தோயின் புகழ்கெடுமாதலின் 'தோயார்' என்றார். 'தந்நலம்' என்பதில் 'நலம்' ஆகுபொருளது. இம்மூன்று குறளாலும் உயர்ந்தோர் விலைமகளிரைத் தீண்டாமை கூறப்பட்டது.
5 சாலமன் பாப்பையா
தம் திறமையில் செருக்குக் கொண்டு, தம் உடல் அழகைப் பலருக்கும் தந்து பணம் பெற விரும்பும் பாலிய தொழிலாளரின் தோளை, அறிவினால் தம் புகழைப் பரப்ப விரும்பும் பெரியோர் தீண்டமாட்டார்.
6 கலைஞர் மு.கருணாநிதி
புகழ்ச்சிக்குரிய சான்றோர் எவரும், இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின் தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார்.
7 சிவயோகி சிவக்குமார்
தனது நலத்தை கவனித்து வாழ்பவர் நாடமாட்டார்கள் இடம் பார்த்து புலன் நலத்தை பறிப்பவர் தோள்.
8 புலியூர்க் கேசிகன்
நெஞ்சிலே பொருள் மேல் ஆசைகொண்டு, அதைப் பெறக் கருதிப் பொருள் தருபவரோடு உடலால் கூடியிருக்கும் மகளிரது தோள்களை, நெஞ்சமில்லாதவர்களே சேர்வர்.
More Kurals from வரைவின்மகளிர்
அதிகாரம் 92: Kurals 911 - 920