Kural 464

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

theLivi ladhanaith thodangaar iLivennum
Edhappaatu anju pavar.

🌐 English Translation

English Couplet

A work of which the issue is not clear,
Begin not they reproachful scorn who fear.

Explanation

Those who fear reproach will not commence anything which has not been (thoroughly considered) and made clear to them.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர்.

2 மணக்குடவர்

ஆராய்ந்தறிதலில்லாத வினையைச் செய்யத் தொடங்கார், இகழ்ச்சியாகிய குற்றப்பாட்டிற்கு அஞ்சுபவர்.

3 பரிமேலழகர்

தெளிவு இலதனைத் தொடங்கார் - இனத்தோடும் தனித்தும் ஆராய்ந்து துணிதல் இல்லாத வினையைத் தொடங்கார், இளிவு என்னும் ஏதப்பாடு அஞ்சுபவர் - தமக்கு இளிவரவு என்னும் குற்றம் உண்டாதலை அஞ்சுவார். (தொடங்கின் இடையின் மடங்கலாகாமையின், 'தொடங்கார்' என்றார். இளிவரவு - அவ்வினையால் பின் அழிவு எய்தியவழி, அதன் மேலும் அறிவும் மானமும் இலர் என்று உலகத்தார் இகழும் இகழ்ச்சி. அஃது உண்டாதல் ஒருதலையாகலின், தௌ¤வுள் வழித் தொடங்குக என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

இளிவு என்னும் ஏதப்பாடு அஞ்சுபவர் - தமக்கு இழிவு என்னும் குற்றம் உண்டாதற்கு அஞ்சும் மானியர்; தெளிவு இலதனைத் தொடங்கார்- வெற்றியாகும் என்னும் உறுதியில்லாத வினையைச் செய்யத் தொடங்கார். தொடங்கின் இடையில் மடங்கவும் தோல்வியடையவும் நேரு மாதலின் ' தொடங்கார்' என்றார். இழிவு தோல்வியடைந்து கெடுவதுடன் உலகோர் கூறும் பழியால் நேர்வது.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

தமக்கு இழிவு எனப்படும் குற்றம் உண்டாவதற்கு அஞ்சுபவர்கள், இனத்துடனும் தனித்தும் ஆராய்ந்து துணியப்படாத தொழிலைத் தொடங்க மாட்டார்கள்.

6 சாலமன் பாப்பையா

தனக்கு அவமானம் என்னும் குற்றம் வரும் என்று பயப்படுபவர், நம்பிக்கை இல்லாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்.

7 கலைஞர் மு.கருணாநிதி

களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.

8 சிவயோகி சிவக்குமார்

தீர்க்கமாக அறியமுடியா ஒன்றை செய்ய முற்படமாட்டார்கள் இகிழ்ச்சி என்ற குற்றத்திற்கு அஞ்சுபவர்கள்.

More Kurals from தெரிந்துசெயல்வகை

அதிகாரம் 47: Kurals 461 - 470

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature