Kural 364

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

thoouymai enpadhu avaavinmai matradhu
vaaimai vaeNta varum.

🌐 English Translation

English Couplet

Desire's decease as purity men know;
That, too, from yearning search for truth will grow.

Explanation

Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

2 மணக்குடவர்

ஒருவர்க்கு அழுக்கறுத்தலாவது ஆசையின்மை; அவ்வாசை யின்மை மெய் சொல்லுதலை விரும்ப வரும். இது பொருள்மேலாசையில்லாதார் பொய் கூறாராதலின் மெய் சொல்ல அவாவின்மை வரும் என்று அவாவறுத்தற்குக் கருவி கூறிற்று.

3 பரிமேலழகர்

தூஉய்மை என்பது அவா இன்மை - ஒருவர்க்கு வீடு என்று சொல்லப்படுவது அவா இல்லாமை,அது வாஅய்மை வேண்ட வரும் - அவ்வவா இல்லாமைதான் மெய்ம்மையை வேண்டத் தானே உண்டாம். (வீடாவது: உயிர் அவிச்சை முதலிய மாசு நீங்குதல் ஆகலின்,அதனைத் 'தூய்மை' என்றும், காரணத்தைக் காரியமாக உபசரித்து, 'தூய்மை' என்பது அவா இன்மை என்றும் மெய்ம்மையுடைய பரத்தை ஆகுபெயரால் 'மெய்ம்மை' என்றும் கூறினார். 'மற்று' மேலையது போல வினைமாற்றின்கண் வந்தது. வேண்டுதல் - இடைவிடாது பாவித்தல். அவா அறுத்தல், வீட்டிற்குப் பரம்பரையான் அன்றி நேரே ஏது என்பதூஉம் அது வரும் வழியும் இதனால் கூறப்பட்டன.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

தூய்மை என்பது அவா இன்மை - ஒருவர்க்குத் தூயநிலைமையாகிய வீடென்று சொல்லப்படுவது அவாவில்லாமையாம்; அது வாய்மை வேண்ட வரும் - அவ்வவா வில்லாமை மெய்யான பரம்பொருளை வேண்டத்தானே வரும். அறியாமையும் அவாவும் முதலிய மாசுமறுவற்றதினால் வீட்டைத்தூய்மையென்றும் , கருமகத்தைக் கரணகமாக்கித் 'தூய்மையென்பது அவாவின்மை ' யென்றும், என்று முள்ள ஒரே மெய்ப் பொருள் பரம்பொருளாதலின் அதை வாய்மையென்றும், பரம்பொருளாற்பெறப்படும் சிறந்த பேரின்பத்தை நோக்கின் இழிந்த பிறவித்துன்பத்திற்கேதுவாகிய ஆசை நீங்குமாதலின் 'வாய்மைவேண்டவரும்' என்றுங் கூறினார். 'வாய்மை' ஆகுபெயர். 'மற்று' வினைமாற்றிடைச்சொல். 'தூஉய்மை,' 'வாஅய்மை' இரண்டும் இசைநிறையளபெடை.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

ஒருவருக்குப் பேரின்ப வீடு என்று சொல்லப்படுவது அவா இல்லாமையே ஆகும். அது மெய்ம்மையை விரும்ப, தானே உண்டாவதாகும்.

6 சாலமன் பாப்பையா

மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

7 கலைஞர் மு.கருணாநிதி

தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும். அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்.

8 சிவயோகி சிவக்குமார்

தூய்மை என்பது ஆசை இல்லாது இருத்தல் மற்றவை வாய்மையை விரும்புவதால் வரும்.

More Kurals from அவாவறுத்தல்

அதிகாரம் 37: Kurals 361 - 370

Related Topics

Because you're reading about Overcoming Desire

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature