Kural 1236

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

thotiyodu thoalnekizha noval avaraik
kotiyar enakkooral nondhu.

🌐 English Translation

English Couplet

grieve, 'tis pain to me to hear him cruel chid,
Because the armlet from my wasted arm has slid.

Explanation

I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.

2 மணக்குடவர்

வளையோடே தோள்கள் பண்டுபோல் இறுகாது நெகிழவும், நினக்குச் சொல்லாது யானே நோவேன்: நீ அவரைக் கொடியரென்று சொல்லுகின்றதற்கு நொந்து. இஃது ஆற்றாளெனக் கவன்றதோழிக்கு ஆற்றவலென்பதுபடத் தலைமகள் சொல்லியது.

3 பரிமேலழகர்

(தான் ஆற்றுதற் பொருட்டு இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) தொடியோடு தோள்நெகிழ - யான் ஆற்றவும், என்வயத்தவன்றித் தொடிகள் கழலுமாறு தோள்கள் மெலிய; அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து நோவல் - அவற்றைக் கண்டு, நீ அவரைக் கொடியர் எனக் கூறுதலைப் பொறாது யான் என்னுள்ளே நோவா நின்றேன். (ஒடு - மேல் வந்த பொருண்மைத்து. 'யான் ஆற்றேனாகின்றது அவர் வாராததற்கன்று; நீ கூறுகின்றதற்கு' என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

[தானாற்றுதற்பொருட்டுத் தலைமகனை இயற்பழித்த தோழிக்குச் சொல்லியது.] தொடியொடு தோள்நெகிழ- யான் ஆற்றியிருக்கவும் என்வயப்படாது கடகங்கள் கழலுமாறு தோள்கள் மெலிய; அவரைக் கொடியர் எனக் கூறல் நொந்து நோவல்- நீ அவற்றைக் கண்டவளவில் காதலரைக் கொடியர் எனக் கூறுதலைப் பொறாது உள்ளே நோகின்றேன். யான் ஆற்றேனாகின்றது காதலர் வராததிற்கன்று; நீ அவரைக் குறைகூறுகின்றதற்கே யென்பதாம். 'ஒடு' மேற்கூறியதே.

5 சாலமன் பாப்பையா

வளையல்கள் கழன்று தோள்கள் மெலிய, அவரைக் கொடுமையானவர் என்று அவை நொந்து பேசுவதைக் கேட்டு நான் வருந்துகிறேன்.

6 கலைஞர் மு.கருணாநிதி

என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன்.

7 சிவயோகி சிவக்குமார்

வளையலுடன் தொள்களும் வேதனையில் நெகிழ்வதால் அவரை கொடியவர் எனக் கூறுகிறேன் நொந்து.

8 புலியூர்க் கேசிகன்

தொடிகள் கழன்று வீழ்ந்து, தோள்களும் மெலிந்ததனால், காண்பவர் மனம் நொந்தவராக, அவரைக் ‘கொடியவர்’ என்று கூறக்கேட்டு, யானும் வருந்துவேனே!

More Kurals from உறுப்புநலனழிதல்

அதிகாரம் 124: Kurals 1231 - 1240

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature