நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கங் கடை.
Transliteration
thunpam uRavarinum seyka thuNivaatri
inpam payakkum vinai.
🌐 English Translation
English Couplet
Though toil and trouble face thee, firm resolve hold fast,
And do the deeds that pleasure yield at last.
Explanation
Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yield bliss (in the end)
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை.
2 மணக்குடவர்
முற்பாடு துன்பம் உறவரினும் துணிந்து செய்க, பிற்பாடு இன்பம் பயக்கும் வினையை.
3 பரிமேலழகர்
துன்பம் உறவரினும் - முதற்கண் மெய்ம்முயற்சியால் தமக்குத் துன்பம் மிக வருமாயினும்; இன்பம் பயக்கும் வினை துணிவு ஆற்றிச் செய்க - அது நோக்கித் தளராது முடிவின்கண் இன்பம் பயக்கும் வினையைத் திட்பமுடையராய்ச் செய்க. (துணிவு - கலங்காமை. அஃதுடையார்க்கு அல்லது கணிகமாய முயற்சித்துன்பம் நோக்காது நிலையுதலுடைய பரிணாமஇன்பத்தை நோக்கிச் செய்தல் கூடாமையின், 'துணிவாற்றிச்செய்க' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவர் வினைசெய்யுமாறு கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
துன்பம் உறவரினும்-வினைசெய்யுங்கால் தமக்குத் துன்பம் மிகுதியாக வருமாயினும்; இன்பம் பயக்கும் வினை துணிவு ஆற்றிச் செய்க-அது பற்றித் தளராமல் முடிவில் இன்பந்தரும் வினையை மனத்திண்மையுடன் செய்க. துன்பம் வருங்காலம் குறிக்கப்படாமையின், வினையின் முதலிடை கடையில் மட்டுமன்றி முழுமையுந் துன்பம் வரினும் பொறுக்க வேண்டு மென்பதாம். பிள்ளை பெறுபவளின் துன்பம் பிள்ளை பெற்றபின் இன்பமாக மாறுவது போல், முயற்சித், துன்பமும் வெற்றிப்பேற்றால் இன்பமாக மாறு மென்பார், 'இன்பம் பயக்கும் வினை' என்றார். 'உற' உரிச்சொல்.
5 சாலமன் பாப்பையா
ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க.
6 கலைஞர் மு.கருணாநிதி
இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்.
7 சிவயோகி சிவக்குமார்
துன்பம் நெருக்கமாக இருந்தாலும் துணிவுடன் செய்யவேண்டும் இன்பம் தரும் செயல் என்றால்.
More Kurals from வினைத்திட்பம்
அதிகாரம் 67: Kurals 661 - 670