துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்.
Transliteration
thuRandhaarkkuth thuppuravu vaeNdi maRandhaarkol
matrai yavarkaL thavam.
🌐 English Translation
English Couplet
Have other men forgotten 'penitence' who strive
To earn for penitents the things by which they live?.
Explanation
It is to provide food etc, for the ascetics who have abandoned (the desire of earthly possessions) that other persons have forgotten (to practise) austerity ?.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ?.
2 மணக்குடவர்
துறந்தவர்களுக்கு உணவு கொடுத்தலை வேண்டித் தவிர்ந்தாராயினரோ? இல்வாழ்வார் தவஞ் செய்தலை. இது தானத்திலும் தவம் மிகுதியுடைத்தென்றது.
3 பரிமேலழகர்
மற்றையவர்கள் - இல்லறத்தையே பற்றி நிற்பார், துறந்தார்க்குத் துப்புரவு வேண்டித் தவம் மறந்தார்கொல் - துறந்தார்க்கு உண்டியும் மருந்தும் உறையுளும் உதவலை விரும்பித் தாம் தவம் செய்தலை மறந்தார் போலும். ( துப்புரவு - அனுபவிக்கப்படுவன. 'வேண்டியாங்கு எய்தற்' பயத்தது ஆகலின் (குறள்265) யாவராலும் செய்யப்படுவதாய தவத்தைத் தாம் செய்யும் தானத்தின்மேல் விருப்பம் மிகுதியால் மறந்தார் போலும். எனவே, தானத்தினும் தவம் மிக்கது என்பது பெற்றாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
மற்றை யவர்கள் - துறவிய ரல்லாத மற்ற இல்லறத்தார்; துறந்தார்க்குத் துப்புரவு வேண்டித் தவம் மறந்தார் கொல்-துறவியர்க்கு ஊணுடையும் உறையுளும் மருந்தும் முதலிய கொடுத்துதவுதலை விரும்பியே, தாம் தவஞ் செய்தலை மறந்தார் போலும்! துத்தல் உண்ணுதல் அல்லது நுகர்தல். துப்பரவு நுகரப்படும் பொருள்கள். தவம் சிறந்ததே யாயினும் , எல்லாருந் துறவியராயின் தவஞ் செய்வார்க்கு இன்றியமையாதவற்றை உதவுவார் ஒருவருமில்லாது போய் விடுவராதலின்,அவ்வுண்மையை ஓர் ஐயந்தழுவிய தற்குறிப் பேற்ற அணியால் உணர்த்தினார். 'கொல்' ஐயம்.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
இல்லறத்தினை மேற்கொண்டவர்கள் துறவிக்கு உணவு முதலியன கொடுத்து உதவவேண்டித் தவம் செய்வதை மறந்துவிட்டார்கள் போலும்!
6 சாலமன் பாப்பையா
துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள் போலும்.
7 கலைஞர் மு.கருணாநிதி
துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக் கூடாது.
8 சிவயோகி சிவக்குமார்
துறந்தவர்களுக்கு உதவிட எண்ணி மறந்துவிட்டார்களோ மற்றவர்கள் தவம் செய்வதை.
More Kurals from தவம்
அதிகாரம் 27: Kurals 261 - 270
Related Topics
Because you're reading about Penance & Austerity