Kural 788

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

udukkai izhandhavan kaipoala aangae
idukkaN kaLaivadhaam natpu.

🌐 English Translation

English Couplet

As hand of him whose vesture slips away,
Friendship at once the coming grief will stay.

Explanation

(True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (before an assembly).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.

2 மணக்குடவர்

உடைசோரநின்றானுக்குக் கைசென்று உடைசோராமற் காத்தாற்போல, இடுக்கண்வந்தால் அப்பொழுதே அவ்விடுக்கணை நீக்குவது நட்பாவது.

3 பரிமேலழகர்

உடுக்கை இழந்தவன் கைபோல - அவையிடை ஆடை குலைந்தவனுக்கு அப்பொழுதே கை சென்று உதவி அவ்விளிவரல் களையுமாறு போல; ஆங்கே இடுக்கண் களைவது நட்பாம் - நட்டவனுக்கு இடுக்கண் வந்துழி அப்பொழுதே சென்று உதவி அதனைக் களைவதே நட்பாவது. (அற்றம் காத்தற்கண் கை தன் மனத்தினும் முற்படுதலின், அவ்விரைவு இடுக்கண் களைவுழியும் அதற்கு ஒத்த தொழில் உவமையினும் வருவிக்க. உடையவன் தொழில் நட்பின்மேல் ஏற்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

உடுக்கை இழந்தவன் கைபோல-அவையிடை ஆடையவிழ்ந்தவனுக்கு அப்பொழுதே கை சென்று திருத்தி அம்மானக் கேட்டை நீக்குவதுபோல; ஆங்கே இடுக்கண் களைவது நட்பு ஆம்-நண்பனுக்குத் துன்பம் வந்தவிடத்து அப்பொழுதே சென்றுதவி அதை நீக்குவதே ஒருவனுக்கு உண்மையான நட்பாகும். 'ஆங்கே' என்பது உடுக்கை திருத்தற்கும் இடுக்கண் களைதற்கும் பொதுவாக இடையில் நின்றது. விரைந்து நீக்குவதென்பது இவ்வுவமையின் பொதுத்தன்மை. மானங் காத்தற்கண் ஒருவன் கை தன் மனத்தினும் முற்படுமென்னும் பரிமேலழகர் கூற்று, உளநூற்கு ஒத்ததன்று. 'உடுக்கை' தொழிலாகுபெயர்.

5 சாலமன் பாப்பையா

பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு.

6 கலைஞர் மு.கருணாநிதி

அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நப்புக்கு இலக்கணமாகும்.

7 சிவயோகி சிவக்குமார்

உடை உடலில் இருந்து விலக்க அதை தடுத்து காக்கும் கை போல் நண்பரின் துன்பம் கண்டு களைப்பதே நட்பு.

More Kurals from நட்பு

அதிகாரம் 79: Kurals 781 - 790

Related Topics

Because you're reading about Friendship

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature