Kural 592

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

uLLam udaimai udaimai poruLudaimai
nillaadhu neengi vidum.

🌐 English Translation

English Couplet

The wealth of mind man owns a real worth imparts,
Material wealth man owns endures not, utterly departs.

Explanation

The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.

2 மணக்குடவர்

உடைமையாவது ஊக்கமுடைமை; பொருளுடைமை நிலை நில்லாது நீங்கும். பொருள் உடையார்க்கு எல்லா முண்டாம் என்பார்க்கு இது கூறப்பட்டது.

3 பரிமேலழகர்

உள்ளம் உடைமை உடைமை - ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலைநின்ற உடைமையாவது; பொருள் உடைமை நில்லாது நீங்கிவிடும் - மற்றைப் பொருள் உடைமை நிலைநில்லாது நீங்கிப்போம். ('உள்ளம்' ஆகுபெயர். ஊக்கம் உள்ளத்துப் பண்பாகலின், அதற்கு நிலை நிற்றலும், பொருள் உடம்பினும் வேறாய் அழிதல் மாலைத்து ஆகலின், அதற்கு நிலை நில்லாமையும் கூறினார். கூறவே, அஃது உடைமையன்று என்பது பெறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

உள்ளம் உடைமை உடைமை - முயற்சியுள்ள முடைமையே ஒருவனுக்கு நிலையான உடைமையாவது ; பொருள் உடைமை நில்லாது நீங்கிவிடும் - மற்றப் பொருளுடைமை எவ்வளவு பெரிதேனும் தன்னிடம் நில்லாது நீங்கிவிடும். ஊக்கத்தினாற் புதுச்செல்வம் உண்டாக்கப்படுவதுடன் பழஞ்செல்வமும் பாதுகாக்கப்படும். 'குந்தித் தின்றாற் குன்றுங் குன்றும்' . ஊக்கம் உள்ளப்பண்பாதலின் அதை ஒருவரும் கவரமுடியாது . செல்வம் இயற்கையினாலும் செயற்கையினாலும் பல்வேறு வகையில் அழிந்துபோம் . ஆதலால் உண்மையான வுடைமை ஊக்கமே என்பதாம் . 'உள்ளம்' ஆகுபெயர் அன்று. அது ஊக்கம் என்பதன் ஒருபொருள் மறுசொல் . உள் - உய் - உயல் - உயற்று - உஞற்று = முயற்சி . ஒ. நோ : முயல் - முயற்று. உள்ளுதல் முன்தள்ளுதல். உள் - உள்ளம். மனத்தைக் குறிக்கும் உள்ளம் என்னும் சொல் உள்ளிருப்பது என்று பொருள்படுதலால் அது வேறாம்.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

ஊக்கம் உடையவராக இருப்பதே ஒருவர்க்கு நிலையான உடைமையாகும். மற்றபடி பொருள் உடைமை யென்பது நிலையாக நில்லாமல் நீங்கிவிடும்.

6 சாலமன் பாப்பையா

மன ஊறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும்.

7 கலைஞர் மு.கருணாநிதி

ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.

8 சிவயோகி சிவக்குமார்

உள்ளத்தில் உரிமையாக அடைந்ததே உரிமையானது. பொருளை அடைந்தது நிலை இல்லாமல் விலகிவிடும்.

More Kurals from ஊக்கமுடைமை

அதிகாரம் 60: Kurals 591 - 600

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature