Kural 1185

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என் மேனி பசப்பூர் வது.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

uvakkaan-em kaadhalar selvaar ivakkaan-en
maeni pasappoor vadhu.

🌐 English Translation

English Couplet

My lover there went forth to roam;
This pallor of my frame usurps his place at home.

Explanation

Just as my lover departed then, did not sallowness spread here on my person ?.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.

2 மணக்குடவர்

எங்காதலராகச் செல்கின்றாரை உங்கே பாராய்; என்மேனி மேலே பசப்புப் பரவுதலை இங்கே பாராய். இஃது அவர் பிரிந்தது இப்பொழுதாயிருக்கப் பசலை பரவாநின்றது. அவர் வருமளவும் யாங்ஙனமாற்றுதும் என்று தலைமகள் கூறியது.

3 பரிமேலழகர்

(காதலர் பிரிந்து அணித்தாயிருக்கவும் ஆற்றுகின்றிலை என்ற தோழிக்கு முன் நிகழ்ந்தது கூறியது.) எம் காதலர் உவக்காண் செல்வார் - பண்டும் நம் காதலர் உங்கே செல்வாராக; என் மேனி பசப்பு ஊர்வது இவக்காண- என் மேனி பசப்பூர்வது இங்கேயன்றோ? அப்பெற்றியது இன்று பிறிதொன்றாமோ? ('உவக்காண்', 'இவக்காண்' என்பன ஒட்டி நின்ற இடைச்சொற்கள், தேய அண்மையாற் கால அண்மை கருதப்பட்டது. 'அவர் செலவும் பசப்பினது வரவும் பகல் இரவுகளின் செலவும் வரவும் போல்வது அறிந்து வைத்து அறியாதாய்போல நீ சொல்லுகின்றது என்ன'? என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(காதலர் பிரிந்தணித்தாயிருக்கவுங் ஆற்றுகின்றிலை யென்ற தோழிக்கு முன் நிகழ்ந்தது கூறியது.) எம் காதலர் உவக்காண் செல்வார் - முன்புறம் காதலர் உதோ உந்த இடத்திற்குத்தான் செல்வார்; இவக்காண் என் மேனி பசுப்பு ஊர்வது-அதற்குள் இங்கே என் உடம்பெல்லாம் பசலை படர்ந்துவிடும். இங்ஙனம் ஒரு சில அடித்தொலைவே நம் காதலர் நடந்து செல்லினும், அடுத்தது காட்டும் பளிங்குபோலப் பளிச்சென்று பசலை படரும் என் மேனி. அவர் பல நாள்வழி அல்லது நாழிகை வழித் தொலைவிலேயே இருப்பினும், ஆற்றியிருக்குமோ என்றவாறாம். ‘உவ’, ‘இவ’ சுட்டிடைச் சொற்கள். காண் முன்னிலையசை, ‘உவ’ என்றது ஒரு சில அடித்தொலைவேயுள்ள முன்னிலையிடத்தை, இம்முன்மைச் சுட்டு இற்றைத் தமிழகத்தில் வழக்கிறந்தது.

5 சாலமன் பாப்பையா

முன்பும்கூட, அந்தப் பக்கம் என் அன்பர் போயிருப்பார்; இந்தப் பக்கம் என் மேனி பசலை கொண்டு விடும். முன்பே அப்படி என்றால் இப்போது எப்படி இருக்கும்?.

6 கலைஞர் மு.கருணாநிதி

என்னைப் பிரிந்து காதலர் சிறிது தொலைவுகூடச் செல்லவில்லை; அதற்குள்ளாக என் மேனியில் படர்ந்து விட்டதே பசலை நிறம்.

7 சிவயோகி சிவக்குமார்

அப்பக்கம் காதலர் பிரிந்து செல்வார் இப்பக்கம் எனது மேனியில் பசலையும் வந்தது.

8 புலியூர்க் கேசிகன்

அதோ பார், என் காதலர் என்னைப் பிரிந்து போகின்றார்; இதோ பார், அதற்குள்ளேயே என் உடலில் பசலையானது வந்து பற்றிப் படருகின்றது!

More Kurals from பசப்புறுபருவரல்

அதிகாரம் 119: Kurals 1181 - 1190

Related Topics

Because you're reading about Pallor of Love

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature