Kural 394

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

uvappath thalaikkooti uLLap piridhal
anaiththae pulavar thozhil.

🌐 English Translation

English Couplet

You meet with joy, with pleasant thought you part;
Such is the learned scholar's wonderous art!.

Explanation

It is the part of the learned to give joy to those whom they meet, and on leaving, to make them think (Oh! when shall we meet them again).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.

2 மணக்குடவர்

மக்களிருவர் உவக்குமாறு கூடி அவர் நினைக்குமாறு பிரிதல் போலும் : கற்றோர் செய்யுந்தொழில். இஃது இன்பம் நுகரினும் வினை செய்யினும் பிறர்க்கும் இன்பம் பயக்கச் செய்தல் கல்வியாலாமென்றது.

3 பரிமேலழகர்

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே - யாவரையும். அவர் உவக்குமாறு தலைப்பெய்து, இனி இவரை யாம் எங்ஙனம் கூடுதும்? என நினையுமாறு நீங்குதலாகிய அத்தன்மைத்து, புலவர் தொழில் - கற்றறிந்தாரது தொழில்.

4 ஞா.தேவநேயப் பாவாணர்

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே- யாரொடும், அவர் மகிழுமாறு சென்று கூடி, இனி இவரை என்று காண்பேமென்று அவர் ஏங்குமாறு நீங்குதலாகிய அத்தன்மையதே; புலவர் தொழில் - சிறந்த கல்வியுடையார் செயலாம். கற்றாரின் அடக்கமும் அறவொழுக்கமும் இன்சொல்லும் உறுதி பயக்கும் அறிவுரையும் எல்லாரையும் இன்புறுத்துதலால், அவரை விட்டுப் பிரிய ஒருவரும் விரும்பார் என்பதாம். ஏகாரம் தேற்றம்.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

யாவரும் மகிழுமாறு அவர்களுடன் சேர்ந்து பழகி, இனி அவரை எப்போதும் காண்போம் என நினைத்துப் பிரிகின்ற தன்மையுடையதே கற்றவர்களின் தொழிலாகும்.

6 சாலமன் பாப்பையா

மற்றவர்கள் கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து பேசி, இனி இவரை எப்போது, எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் எண்ணுமாறு பிரிவது கற்று அறிந்தவரின் செயல்.

7 கலைஞர் மு.கருணாநிதி

மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.

8 சிவயோகி சிவக்குமார்

விருப்பமுடன் ஒன்றாக கூடி உள்ளத்தால் பிரிந்து இருத்தல் எல்லாம் புலவர்கள் தொழில்

More Kurals from கல்வி

அதிகாரம் 40: Kurals 391 - 400

Related Topics

Because you're reading about Education & Learning

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature