Kural 1198

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

veezhvaarin insol peraaadhu ulakaththu
vaazhvaarin van-kanaar il.

🌐 English Translation

English Couplet

Who hear from lover's lips no pleasant word from day to day,
Yet in the world live out their life,- no braver souls than they!.

Explanation

There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kind word from their beloved.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை உடையவர் இல்லை.

2 மணக்குடவர்

தம் காதலரிடத்துநின்று வரும் இனியசொற்களைக் கேளாது உயிர்வாழ்வாரைப்போல வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை.

3 பரிமேலழகர்

(தலைமகன் தூது வரக்காணாது சொல்லியது.) வீழ்வாரின் இன்சொல் பெறாது வாழ்வாரின் - தம்மால் விரும்பப்படும் காதலர் திறத்துநின்றும்ஓர் இன்சொல்லளவும் பெறாதே பிரிவாற்றி உயிர் வாழ்கின்ற மகளிர் போல; வன்கணார் உலகத்து இல் - வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை. ('காதலர்திறத்துச் சொல் யாதானும் எனக்கு இனிது', என்னும் கருத்தால் 'இன்சொல்' என்றாள். இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. யான் வன்கண்ணேனாகலின் அதுவும் பெறாது உயிர் வாழாநின்றேன் என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(தலைமகனிடத்தினின்று தூதுவராமைபற்றித் தலைமகள் வருந்தியது.) வீழ்வாரின் இன்சொல் பெறாது வாழ்வாரின்-தம்மால் விரும்பப்படும் காதலரிடத்து நின்றும் ஓரின் சொல்லளவும் வரப்பெறாதே பிரிவாற்றி உயிர்வாழ்கின்ற மகளிர்போல:வன்கணாளர் உலகத்து இல்-வன்னெஞ்சர் இவ்வுலகத்தில் வேறொருவருமில்லை. தொலைவிலுள்ள காதலரிடத்தினின்று வருந் தூதெல்லாம் இக்காலத் தஞ்சல் போலப் பொதுவாக இன்பம் பயக்குமாதலின் ’இன்சொல்’ என்றும், பிரிவாற்றுதலோடு தூதின்மை யாற்றுதலுஞ் செய்தலால் ’வாழ்வாரின் வன்கணாரில்’ என்றுங் கூறினாள். ’பெறாஅ’ இசைநிறையளபெடை.. இழிவு சிறப்பும்மை தொக்கது.

5 சாலமன் பாப்பையா

தம்மால் விரும்பப்படும் கணவனிடமிருந்து ஓர் இன்சொல் கூடப் பெறாமல் உயிர் வாழும் மனைவியைப் போன்ற கொடியவர் இவ்வுலகத்தில் வேறு இல்லை.

6 கலைஞர் மு.கருணாநிதி

பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராத நிலையில், உலகில் வாழ்கின்றவரைப் போல், கல் நெஞ்சம் உடையவர் யாரும் இருக்க முடியாது.

7 சிவயோகி சிவக்குமார்

காதலில் வீழ்ந்தவர் இடத்தில் இருந்து இனிமையான சொல் பெறாமல் உலகத்தில் வாழ்பவரை விட வன்மையானவர் இல்லை.

8 புலியூர்க் கேசிகன்

தாம் விரும்பிய காதலரின் இனிய சொல்லைப் பெறாமல், உலகத்தில் துன்புற்று வாழ்கின்ற பெண்களை விட வன்கண்மை உடையவர்கள், யாரும் இல்லை.

More Kurals from தனிப்படர்மிகுதி

அதிகாரம் 120: Kurals 1191 - 1200

Related Topics

Because you're reading about Excessive Longing

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature