வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
Transliteration
veruvandha seydhozhukum vengoala naayin
oruvandham ollaik kedum.
🌐 English Translation
English Couplet
Where subjects dread of cruel wrongs endure,
Ruin to unjust king is swift and sure.
Explanation
The cruel-sceptred king, who acts so as to put his subjects in fear, will certainly and quickly come to ruin.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.
2 மணக்குடவர்
அரசன் அஞ்சத்தகுவனவற்றைச் செய்தொழுகும் வெங்கோலையுடையனாயின் அவன் ஒருதலையாகக் கடிதிற் கெடும்.
3 பரிமேலழகர்
வெருவந்த செய்து ஒழுகும் வெங்கோலன் ஆயின் - குடிகள் வெருவிய செயல்களைச் செய்து நடக்கும் வெங்கோலனாம் ஆயின்; ஒருவந்தம் ஒல்லைக் கெடும் - அரசன் ஒருதலையாகக் கடிதில் கெடும். (வெங்கோலன் என்பது ஈண்டு வாளா பெயராய் நின்றது. 'ஒருவந்தம், ஒருதலை, ஏகாந்தம்' என்பன ஒருபொருட்கிளவி. அச்செயல்களும் கேடுகளும் முன்னர்க் கூறப்படும்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
வெருவந்த செய்து ஒழுகும் வெம்கோலன் ஆயின் -அரசன் குடிகள் அஞ்சுதற் கேதுவான செயல்களைச் செய்து வாழுங் கொடுங்கோலனாயின், ஒருவந்தம் ஒல்லைக் கெடும் -உறுதியாக விரைந்து கெடுவான்.ஒரு வந்தம்-ஒரு தலை.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
குடிகள் மிகவும் அஞ்சுகின்ற செயல்களைச் செய்து நடக்கும் வெங்கோலனாகிவிடில், அவ்வரசன் உறுதியாகக் கடிதல் கெடுவான்.
6 சாலமன் பாப்பையா
குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.
7 கலைஞர் மு.கருணாநிதி
குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்.
8 சிவயோகி சிவக்குமார்
வெறுப்பு வந்து செயல்படும் கொடிய ஆட்சியாளன் இருந்தால் ஒன்றுமை பகைமையாய் மாறி உள்ளதும் கெடும்.
More Kurals from வெருவந்தசெய்யாமை
அதிகாரம் 57: Kurals 561 - 570