Kural 661

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

vinaiththitpam enpadhu oruvan manaththitpam
matraiya ellaam piRa.

🌐 English Translation

English Couplet

What men call 'power in action' know for 'power of mind'
Externe to man all other aids you find.

Explanation

Firmness in action is (simply) one's firmness of mind; all other (abilities) are not of this nature.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை.

2 மணக்குடவர்

வினையினிடத்துத் திண்மை யென்று சொல்லப்படுவது ஒருவன் மனத்து உண்டான திண்மை; அதனையொழிய மற்றவையெல்லாம் திண்மையென்று சொல்லப்படா. மற்றவையென்றது கருவியும் உபாயமும்.

3 பரிமேலழகர்

வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் - வினைசெய்தற்கண் திண்மை என்று சொல்லப்படுவது அதனை முடித்தற்குரியானொருவன் மனத்தினது திண்மை; மற்றைய எல்லாம் பிற - அஃது ஒழிந்தன எல்லாம் அதற்குத் திண்மை என்று சொல்லப்படா. (ஒழிந்தனவாவன: படை, அரண், நட்பு முதலியவற்றின் திண்மைகள். அவையும் அதற்கு வேண்டுவனவாய் இனமாகலின், 'மற்றைய' என்றும், வேண்டினும் அஃது இல்வழிப் பயனிலவாகலின் 'பிற' என்றும் கூறினார். இதனால் வினைத் திட்பமாவது இன்னது என்பது கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்-வினை செய்வதில் திண்மை என்பது அதைச் செய்பவனின் மனத்திண்மையே; மற்றைய எல்லாம் பிற-அஃதல்லாத பிறவெல்லாம் அதைப்போன்ற திண்மையாகா. மற்றைய பிற வாவன குடி, படை, அரண், நட்பு என்பவற்றின் திண்மைகள். அவையும் வேண்டுமாயினும், செய்வானின் மனத்திண்மை யில்லாவிடத்து அவை பயன்படாவாதலின் 'மற்றையவெல்லாம் பிற' என்றார்.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

தொழில் செய்யும்போது திண்மையென்று சொல்லப்படுவது அதனை முடித்தற்குரியவனுடைய மனத்திண்மையே ஆகும்.அதுவல்லாத மற்றவை எல்லாம் திண்மையென்று சொல்லப்பட மாட்டாவாம்.

6 சாலமன் பாப்பையா

ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்டா.

7 கலைஞர் மு.கருணாநிதி

மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது.

8 சிவயோகி சிவக்குமார்

செயலில் உறுதி என்பது ஒருவரது மனதின் உறுதியே, மற்றவை எல்லாம் அதற்கு அடுத்ததே.

More Kurals from வினைத்திட்பம்

அதிகாரம் 67: Kurals 661 - 670

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature