Kural 775

விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

vizhiththakaN vaelkoNa teRiya azhiththimaippin
ottandroa van-ka Navarkku.

🌐 English Translation

English Couplet

To hero fearless must it not defeat appear,
If he but wink his eye when foemen hurls his spear.

Explanation

Is it not a defeat to the valiant to wink and destroy their ferocious look when a lance in cast at them (by their foe) ?.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.

2 மணக்குடவர்

மாற்றாரோடு எதிர்த்துச் சிவந்து நோக்கின கண்ணிலே ஒரு வேலினாலே எறிய, அதற்கு மீண்டும் இமைப்பாராயின் அஃது அஞ்சாதார்க்குக் கெட்டதனோடு ஒக்கும். விழித்தகண் என்பதற்கு மாற்றானை நோக்கி யிமையாத கண் எனினும் அமையும்.

3 பரிமேலழகர்

விழித்த கண் - பகைவரை வெகுண்டு நோக்கிய கண்; வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின் - அவர் வேலைக்கொண்டு எறிய அஃது ஆற்றாது அந்நோக்கை அழித்து இமைக்குமாயின்; வன்கணவர்க்கு ஒட்டு அன்றோ - அது வீரர்க்குப் புறங்கொடுத்தலாம். (அவ்வெகுளி நோக்கம் மீட்டலும் போரின்கண் மீட்சி எனக்கருதி அதுவும் செய்யார் என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

விழித்தகண்-பகைவரைச் சினந்து நோக்கி விரிவாகத் திறந்தகண்; வேல்கொண்டு எறிய அழித்து இமைப்பின்-அவர் ஒளிவீசும் வேலைப் பளிச்சென் றெறிய, அதற்குக் கூசி முன்னை நிலைக்கு மாறாக இமை கொட்டின்; வன்கணவர்க்கு ஓட்டு அன்றோ-அதுவும் உண்மை மறவர்க்குப் புறங்கொடுத்தலாகுமன்றோ!. 'அழித்து' என்பது 'அழித்தழுதாள்' குறள் (1317) என்பதிற் போல நின்றது. 'ஒட்டு' தோற்றோடல். இங்கு ஓட்டென்றது ஓட்டாகக் கருதப்படுதலை. சிறந்த மறவர் தம் கண்ணுரத்தினால் முறுத்த நோக்கும் மறுத்த நோக்கார் என்பதாம்.

5 சாலமன் பாப்பையா

பகைவரைச் சினந்து பார்க்கும் கண், அவர்கள் எறியும் வேலைப் பார்த்து மூடித் திறந்தாலும், சிறந்த வீரர்க்கு அதுவே புறங் கொடுத்தலாகும்.

6 கலைஞர் மு.கருணாநிதி

களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்குஒப்பாகும்.

7 சிவயோகி சிவக்குமார்

கவனமாய் விரிந்த விழிகளின் இமைகள் தன்மீது எறிந்த வேல் கண்டும் ஒட்டாது திடமான மனிதற்கு.

More Kurals from படைச்செருக்கு

அதிகாரம் 78: Kurals 771 - 780

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature