Kural 873

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

EmuR Ravarinum Ezhai thamiyanaaip
pallaar pakaikoL pavan.

🌐 English Translation

English Couplet

Than men of mind diseased, a wretch more utterly forlorn,
Is he who stands alone, object of many foeman's scorn.

Explanation

He who being alone, incurs the hatred of many is more infatuated than even mad men.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.

2 மணக்குடவர்

பித்து உற்றவரினும் அறிவிலன், தனியனாயிருந்து பலரோடு பகை கொள்ளுமவன். இது பலரோடும் பகைக்கொள்ளலாகா தென்றது.

3 பரிமேலழகர்

தமியனாய்ப் பல்லார் பகை கொள்பவன் - தான் தனியனாய் வைத்துப் பலரோடு பகை கொள்வான்; ஏமுற்றவரினும் ஏழை - பித்துற்றாரினும் அறிவிலன். (தனிமை - சுற்றம்,நட்பு, படை முதலிய இன்மை. மயக்கத்தால் ஒப்பாராயினும் ஏமுற்றவர் அதனால் தீங்கு எய்தாமையின் தீங்கெய்துதலுமுடைய இவனை 'அவரினும் ஏழை' என்றார். தீங்காவது துணையுள் வழியும் வேறல் ஐயமாயிருக்க ,அஃது இன்றியும் பலரோடு பகைகொண்டு அவரால் வேறுவேறு பொருதற்கண்ணும் அழிந்தே விடுதல். இவை மூன்று பாட்டானும் பகைகோடற் குற்றம் பொதுவினுஞ் சிறப்பினும் கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

தமியனாய்ப் பல்லார் பகை கொள்பவன்-தான் துணையின்றித் தனியனா யிருந்துகொண்டே பலரொடு பகைகொள்பவன்; ஏமுற்றவரினும் ஏழை-பித்தம் பிடித்தவரினும் பேதையானவன். தனிமை நட்பின்மை, அறிவின் திரிவால் இருவரும் ஒப்பாராயினும், பித்தன் பொதுவாக ஒருவரையும் பகையாமையாலும் அதனால் அவனுக்குப்பிறராற் கேடின்மையானும், துணையோடு கூடிய வழியும் பகைவரை வெல்லுதல் உறுதியில்லாதிருக்க, அஃதில்லாதவன் ஒரே சமையத்திற் பலரொடு பொரின் தான் உடனே அழிதல் முழுவுறுதியென்பதை அறியாமையானும், பலர்பகை கொண்ட தனியனை ’ஏமுற்றவரினும் ஏழை’ என்றார். இவ்விரு குறளாலும் பகைகொள்ளுதல் சிறப்பு வகையால் விலக்கப்பட்டது.

5 சாலமன் பாப்பையா

தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாகப் பெறும் ஆட்சியாளன் பித்தரிலும் அறிவற்றவன்.

6 கலைஞர் மு.கருணாநிதி

தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்.

7 சிவயோகி சிவக்குமார்

தனி மனிதனாய் பலரைப் பகைத்துக் கொள்பவர் இகழ்வானவர்களை விட ஏழை.

8 புலியூர்க் கேசிகன்

தான் துணைவலிமை இல்லாமல் தனியனாய் இருப்பதறிந்தும், பலருடன் பகைகொண்டு வாழும் அறிவற்றவன், பித்துற்ற மக்களிலும் அறிவிழந்தவன் ஆவான்.

More Kurals from பகைத்திறந்தெரிதல்

அதிகாரம் 88: Kurals 871 - 880

Related Topics

Because you're reading about Knowing the Enemy

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature