Kural 870

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லா தொளி.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

kallaan vekuLum siRuporuL eGnGnaandrum
ollaanai ollaa thoLi.

🌐 English Translation

English Couplet

The task of angry war with men unlearned in virtue's lore
Who will not meet, glory shall meet him never more.

Explanation

The light (of fame) will never be gained by him who gains not the trifling reputation of having fought an unlearned (foe).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

(தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்.

2 மணக்குடவர்

கல்லாதானுமாய், வெகுளியுடையனுமாய்ச் சிறு பொருளனுமாகிய பகைவனை எல்லாநாளும் ஒளி பொருந்தாது.

3 பரிமேலழகர்

கல்லான் வெகுளும் சிறுபொருள் ஒல்லானை - நீதிநூலைக் கல்லாதானோடு பகைத்தலான் வரும் எளிய பொருளை மேவாதானை; எஞ்ஞான்றும் ஒளி ஒல்லாது - எஞ்ஞான்றும் புகழ் மேவாது. (சிறு பொருள் - முயற்சி சிறிதாய பொருள். நீதி அறியாதானை வேறல் எளிதாயிருக்கவும், அது மாட்டாதானை வெற்றியான் வரும் புகழ் கூடாது என்பதாம், ஆகவே இச்சிறிய முயற்சியாற் பெரிய பயன் எய்துக என்றவாறாயிற்று. இதற்குப் பிறரெல்லாம் அதிகாரத்தோடு மாறாதன் மேலும் ஒரு பொருள் தொடர்பு படாமல் உரைத்தார். இவை மூன்று பாட்டானும் அதனினாய பயன் கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

கல்லான் வெகுளும் சிறு பொருள் ஒல்லானை - அரசியல் நூல் அறியாதவனைப் பகைத்தால் வரும் எளியவழிப் பொருளோடு பொருந்தாதவனை; எஞ்ஞான்றும் ஒளி ஒல்லாது-ஒரு போதும் புகழ் பொருந்தாது. ’சிறுபொருள்’ சிறுமுயற்சியால் வரும் பொருள். சிறு முயற்சியே செய்யமாட்டாதவன் ஒருகாலும் பெருமுயற்சி மேற்கொள்ளானாகலின் ’எஞ்ஞான்றும் .... ஒல்லா தொளி’ என்றார். ஒளி என்பது வாழ்நாட்காலத்து இசை.

5 சாலமன் பாப்பையா

பழைய நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது நம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர்.

6 கலைஞர் மு.கருணாநிதி

பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள்.

7 சிவயோகி சிவக்குமார்

கற்று அறியாதவன் வெறுக்கும் சிறுபொருள் எக்காலத்திலும் உடன்பாடதவனை கூட்டத்துடன் உடன்படுத்தாது.

8 புலியூர்க் கேசிகன்

நீதி நூலைக் கல்லாதவனோடு பகை கொண்டு அழிப்பதனால் வரும் சிறுபொருளை, எப்போதும் தான் அடைவதற்கு நினையாதவனை, வெற்றிப் புகழும் சேர்ந்திருக்காது.

More Kurals from பகைமாட்சி

அதிகாரம் 87: Kurals 861 - 870

Related Topics

Because you're reading about Greatness of Enmity

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature