Kural 1171

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாம்காட்ட யாம்கண் டது.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

kaNdhaam kaluzhva thevan-koloa thandaanhoi
thaamkaatta yaamkan dadhu.

🌐 English Translation

English Couplet

They showed me him, and then my endless pain
I saw: why then should weeping eyes complain?.

Explanation

As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?.

2 மணக்குடவர்

அமையாத நோயை யாங்கண்டது அந்நோய் செய்தாரைத் தாங்காட்டுதலானே யன்றே? பின்னர் அக்கண்கள்தாம் காண்டல் வேட்கையாற் கலுழ்கின்றது யாவர் காட்டுவாராகக் கருதி? இது தலைமகள் காட்டுவாரில்லை யென்று தோழியைக் குறித்துச் சொல்லியது.

3 பரிமேலழகர்

(நின் கண்கள் கலுழ்ந்து தம் அழகு இழவாநின்றன, நீ ஆற்றல் வேண்டும், என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) தண்டா நோய் யாம் கண்டது தாம் காட்ட - இத்தணியா நோயை யாம் அறிந்தது தாம் கலுழ்வது எவன் கொல் - அன்று அத்தொழிலவாய கண்கள், இன்று எம்மைக் காட்டச் சொல்லி அழுகின்றது என் கருதி? ('காட்ட' என்பதற்கு ஏற்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. 'இன்றும் தாமே காட்டுதல் அல்லது யாம் காட்டுதல் யாண்டையது'? என்பதாம்.

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(நின் கண்கள் கலங்கித் தம் அழ நீ அழுதல் கூடாதென்ற தோழிக்குச் சொல்லியது) தாம்காட்ட தண்டாநோய் யாம் கண்டது-தாம் அன்று எம் காதலரை எமக்கு வலியக் காட்டினதினாலன்றோ இத் தணியா நோயை யாம் அடைந்து; கண் தாம் கலுழ்வது எவன்கொல்-அங்ஙனமிருக்கவும், இன்று தமக்கு அவரைக் காட்டச் சொல்லி என் கண்கள் என்னை வேண்டி யழுவது என்ன கருத்தொடு? எமக்குத் தெரியவில்லையே! இன்று அன்றுபோல் தாமே காட்டுவதல்லது யாம் காட்டுவது எங்ஙனம் என்பதாம். 'காட்ட' என்பதற்குரிய செயப்படுபொருள்வருவிக்கப்பட்டது. 'கொல்' ஐயம். 'ஓ' அசைநிலை.

5 சாலமன் பாப்பையா

தணியாத காதல் துன்பத்தை நான் அறிந்ததே இந்தக் கண்கள் எனக்கு அவரைக் காட்டியதால்தானே? இப்போது அவரைக் காட்டு என என்னிடம் அழுவது எதற்கு?.

6 கலைஞர் மு.கருணாநிதி

கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்?.

7 சிவயோகி சிவக்குமார்

கண்ணே நீ வருந்துவது எப்படி ? மாறாத நோயை தானாகவே கண்டு தனக்குள்ளே வருந்துகிறாய்.

8 புலியூர்க் கேசிகன்

இக்கண்கள் அவரைக் காட்டியதால் அல்லவோ நீங்காத இக் காமநோயை யாமும் பெற்றோம்; அவை, இன்று என்னிடம் காட்டச் சொல்லி அழுவது எதனாலோ?

More Kurals from கண்விதுப்பழிதல்

அதிகாரம் 118: Kurals 1171 - 1180

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature