Kural 1175

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் காமநோய் செய்தஎன் கண்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

patalaatraa paidhal uzhakkum katalaatraak
kaamanoi seydha-en kan.

🌐 English Translation

English Couplet

The eye that wrought me more than sea could hold of woes,
Is suffering pangs that banish all repose.

Explanation

Mine eyes have caused me a lust that is greater than the sea and (they themselves) endure the torture of sleeplessness.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.

2 மணக்குடவர்

கடலினும் மிக்க காமநோயை என்மாட்டு நிறுத்துதலானே கண்கள் தாம் உறங்கமாட்டாவாய்த் துன்பமுறாநின்றன. இது பிறர்க்கு இன்னாமை செய்தார்க்கு இன்னாமை வந்ததென்று தோழிக்குத் தலைமகள் கூறியது.

3 பரிமேலழகர்

(இதுவும் அது) கடல் ஆற்றா காமநோய் செய்த என்கண்- எனக்குக் கடலும் சிறிதாம் வண்ணம் பெரியதாய காம நோயைச் செய்த என் கண்கள்; படல் ஆற்றா பைதல் உழக்கும் -அத் தீவினையால் தாமும் துயில்கிலவாய்த் துன்பத்தையும் உழவாநின்றன. (காமநோய் காட்சியான் வந்ததாகவின், அதனைக் கண்களே செய்ததாக்கிக் கூறினாள். துன்பம் அழுதலானாயது)

4 ஞா.தேவநேயப் பாவாணர்

கடல் ஆற்றாக் காமநோய் செய்த என் கண்-கடலுஞ் சிறிதாம் வண்ணம் பேரளவுள்ள காமநோயை எனக்குச் செய்த என் கண்கள்; படல் ஆற்றா பைதல் உழக்கும்-அத்தீவினையால் தாமும் தூக்கம் பெறாதனவாய்த் துன்பபப்படுகின்றன. வினைவிதைத்தவன் வினையறுப்பானாதலால், என்னைத் துன் புறுத்திய கண்கள் தாமும் துன்புறுகின்றன என்றாள்; காமநோய் காட்சியால் வந்ததனால், கண்ணே அந்நோயைத் தந்ததாகக் கூறினாள். கண் துன்புறுதலாவது அழுதலும் எரிச்சல் கொள்ளுதலும்.

5 சாலமன் பாப்பையா

கடலைவிடப் பெரிதாகும் காதல் துன்பத்தை எனக்குத் தந்த கண்கள், தாமும் தூங்காமல், துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.

6 கலைஞர் மு.கருணாநிதி

கடல் கொள்ளாத அளவுக்குக் காதல் நோய் உருவாகக் காரணமாக இருந்த என் கண்கள், இப்போது தூங்க முடியாமல் துன்பத்தால் வாடுகின்றன.

7 சிவயோகி சிவக்குமார்

உறக்கம் கொள்ள உடன்படாது இருக்கிறது கடலைவிட பெரிய காம நோயை உண்டாக்கிய என் கண்.

8 புலியூர்க் கேசிகன்

கடலிலும் பெரிதான காமநோயை அன்று எனக்குச் செய்த இக் கண்கள், அத் தீவினையால், தாமும் உறங்காமல் இவ்விரவுப் பொழுதில் துன்பத்தை அடைகின்றன.

More Kurals from கண்விதுப்பழிதல்

அதிகாரம் 118: Kurals 1171 - 1180

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature